தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் தஞ்சையில் கள ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சென்னை செல்வதற்காக திருச்சி வருகை தந்தார். பின்னர் அவர் மத்திய பேருந்து நிலையம் அருகே மிளகு பாறையில் உள்ள அரசு ஆதிதிராவிட நலப் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்து’ நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்ற ராகினி என்ற மாணவி “கிளாட்” தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அந்த மாணவியை முதல்வர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு பொன்னாடை அணிவித்து பேனா ஒன்றையும் பரிசளித்தார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பலர் உடன் இருந்தனர். முதல்வர் நேரடியாக வந்து தனக்கு வாழ்த்து கூறியது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று கிளாட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். அதற்கு என்னுடைய பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்தார்கள். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் முதல்வன் திட்டத்தை கொண்டு வந்த அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த மாணவி கூறினார். அதே போல அந்த மாணவியின் தந்தை தயாளன் மற்றும் அவருடைய பாட்டி நல்லம்மாளும் முதல்வர் நேரில் தங்களுடைய மகளை வந்து சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். மாணவி ராகினி சிறு வயதிலேயே தாயை இழந்தவர். அவருடைய தந்தை தயாளன் ஹோட்டல் ஒன்றில் கூலி வேலை செய்து வருகிறார். அவரின் பாட்டி அரவணைப்பில் வளர்ந்து வரும் ராகினி செவித்திறன் குறைபாடு உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.