இந்தியாவில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்கம்தான் பிரதான சேமிப்பாக இருந்து வருகிறது. தாங்கள் சம்பாதிக்கும் வருமானத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையை தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்தவகையில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. அட்சய திருதியை மற்றும் அதற்கு அடுத்த நாட்களில் தங்கத்தின் விலை உச்சம் தொட்டது. அதாவது ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்தை கடந்தது. இந்தநிலையில் இன்று (12-05-2025) ஆபரணத் தங்கத்தின் விலையில் இருமுறை சரிவு காணப்பட்டது. அதாவது ஒரேநாளில் சவரன் ரூ.2,360 குறைந்து விற்பனையானது. இன்று காலை ஒரு சவரன் ரூ.1320 குறைந்து ரூ.71,040க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.8880 ஆக இருந்தது. தொடர்ந்து இன்று மாலையிலும் தங்கம் விலை சரிந்துள்ளது. அதன்படி, ரூ.1040 குறைந்து, சவரன் ரூ.70,000க்கும், ஒரு கிராம் ரூ.8750க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் கடும் விலை சரிவை தொடர்ந்து சென்னையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதாக நகை வியாபாரிகள் கூறினர். இந்த விலை மாற்றம், அடுத்து வரக்கூடிய நாட்களில் எப்படி இருக்கும் என்பது போக, போகத்தான் தெரிய வரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Comments are closed.