Rock Fort Times
Online News

கியாஸ் சிலிண்டர் தொடர்பான குறைதீர் கூட்டம் துறையூரில் ஜூன் 21ம் தேதி நடக்கிறது !

திருச்சி மாவட்டத்தில் சிலிண்டா் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் விதமாக துறையூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், எண்ணெய் நிறுவன மேலாளா்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளா்கள் ஆகியோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகா்வோர் குறைதீர்க்கும் கூட்டம், துறையூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜூன் 21ம் தேதி அன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் துறையூர் வட்டத்திற்கு உட்பட்ட எரிவாயு நுகா்வோர்கள், அங்கீகாிக்கப்பட்ட தன்னார்வ நுகா்வோர் அமைப்புகள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு உருளை விநியோகம் தொடா்பான குறைபாடுகளை தெரிவித்து பயன்பெறலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது என திருச்சி மாவட்ட கலெக்டர் எம்.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்