திருச்சி, சமயபுரம் பகுதியில் கள் விற்பனை “கனஜோர்”- காவல்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுப்பார்களா? (வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உப்பாறு பகுதியில் கள் விற்பனை கன ஜோராக நடந்து வருகிறது. ஒரு லிட்டர் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அப்போது அங்கு சென்ற இளைஞர்கள் சிலர், இந்த பகுதியில் பனை மரங்கள் இருந்தும் கள் இறக்கப்படுவதில்லை. எங்கிருந்து கள் வருகிறது என கேட்டுள்ளனர். அதற்கு கள் வியாபாரி, வண்ணாங்கோவில் பகுதியிலிருந்து வாங்கி வந்து விற்பதாக தெரிவித்தார். வண்ணாங்கோவில் பகுதியில் இருந்து 25 கிலோமீட்டர் தூரம் உள்ள உப்பாறு பகுதிக்கு கள் கடத்தி வரும்போது அதை காவல்துறையினர் யாரும் பிடிக்காதது ஏன்?, சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட போலீசார் இதனை கண்டு கொள்ளாதது ஏன்? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோல சமயபுரம், சிறுகனூர், கானக்கிளியநல்லூர் பகுதிகளிலும் கள் விற்பனை நடந்து வருகிறது. சில வியாபாரிகள் அதிக போதைக்காக கள்ளில் போதை மாத்திரை கலந்தும் விற்கிறார்கள். இதனால் இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருகிறது. ஆகவே கள் வியாபாரிகள் மீது திருச்சி மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments are closed.