திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி இன்று( ஜூன் 19) நடைபெற்றது. திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் எம்.எஸ். அன்பழகன் பயணிகளுக்கு நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கி இதனை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மூத்த கோட்ட பொறியாளர் (ஒருங்கிணைப்பு )பி.நந்தலால், மூத்த அதிகாரிகள், தெற்கு ரயில்வே பொறியியல் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க உறுப்பினர்கள், திருச்சிராப்பள்ளி பிரிவு ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இலவச மோர் வழங்கும் ஏற்பாட்டை தெற்கு ரயில்வே பொறியியல் ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கம் திருச்சி பிரிவு தலைவர் குமார் நந்தகோபால், செயலாளர் டி. மோகன் ரமணா, பொருளாளர் சி. ரமேஷ் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் செய்துள்ளனர். இந்த இலவச மோர் மற்றும் குடிநீர் விநியோகம் ஜூன் 19 முதல் ஜூலை 10 வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.