Rock Fort Times
Online News

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம்…

அமைச்சர் கே.என்.நேரு நடத்தி வைத்தார்..

தமிழ்நாடு அரசு சார்பில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு கோவில்கள் சார்பாக 4 கிராம் தங்கத்தாலி, ரூ.70 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கி திருமணம் செய்து வைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 500 ஜோடிகளுக்கு கோவில் சார்பாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு கூடுதலாக மேலும் 100 ஜோடிகள் சேர்த்து ஒரு மண்டலத்திற்கு 30 ஜோடிகள் வீதம் 600 ஜோடிகளுக்கு கோவில்கள் சார்பாக திருமணம் நடத்தி வைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார் . அதன்படி, முதற்கட்டமாக 07.07.2023 அன்று 10 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டடது. இரண்டாம் கட்டமாக தகுதியுள்ள ஜோடிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் இன்று (11.09.2023) திருமணம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருச்சி இணை ஆணையர் மண்டலத்திற்குட்டபட்ட (திருச்சி மற்றும் பெரம்பலூர்) மாவட்டத்தைச் சேர்ந்த 14 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. விழாவில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு மணமக்களுக்கு தாலியினை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். மேலும் திருமண தம்பதிகளுக்கு 4 கிராம் தங்கத் தாலி, பீரோ, கட்டில், மிக்ஸி, பாத்திரங்கள், மளிகை சாமான்கள் உள்ளிட்ட ரூ .70 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் ஐஏஎஸ் , மாநகராட்சி மேயர் அன்பழகன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பிரகாஷ், சமயபுரம் கோவில் இணை ஆணையர் கல்யாணி, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, ஒன்றிய செயலாளர் வி.எஸ்.பி இளங்கோவன் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்