Rock Fort Times
Online News

திருச்சி, தென்னூர் உக்கிர மாகாளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா… * ஏப்ரல் 3-ந் தேதி தேரோட்டம், குட்டி குடித்தல் நிகழ்ச்சி!

திருச்சி, தென்னூர் உக்கிர மாகாளியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழா வருகிற 19-ந் தேதி (புதன்கிழமை) காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று தாயாருக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது .இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 31 -ந் தேதி இரவு மறுக்காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்ரல் 1-ந்தேதி காளி அவிட்டம், அம்பாள் புறப்பாடு நடக்கிறது. 2-ந் தேதி சுத்த பூஜை, வீதி உலா நடக்கிறது. சிகர நிகழ்ச்சியாக  3 – ந்தேதி தேரோட்டம், குட்டி குடித்தல், நிகழ்ச்சி நடக்கிறது.
4 -ந்தேதி மஞ்சள் நீராட்டு, வீதி உலா நிகழ்ச்சியும், 5-ந் தேதி அம்பாள் குடி புகுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 6-ந் தேதி விடையாற்றி உற்சவம், மாலையில் 6 மணிக்கு மேல் சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் தெய்வீக மகா சபையினர் செய்து வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்