Rock Fort Times
Online News

திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் “தண்ணி”யில் தவறி விழுந்த நபரை கரை சேர்த்த தீயணைப்பு வீரர்கள்…!(வீடியோ இணைப்பு)

திருச்சி, நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையில் இருந்து தென்னூர் அண்ணா நகர் செல்லும் சாலையின் அருகே உய்யகொண்டான் வாய்க்கால் உள்ளது. அந்த வாய்க்கால் ஓரத்தில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். அந்த வாய்க்காலில் ஒரு நபர் தவறி விழுந்து உள்ளே கிடந்துள்ளார். இதனை அவ்வழியாக சென்ற ஒரு நபர் பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், கண்டோன்மென்ட் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த நபரை போராடி மீட்டனர். அந்த நபர் மதுபோதையில் வாய்க்காலில் தவறி விழுந்திருக்கலாம் என தெரிகிறது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பெயர் ஜான் என்பதும், கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்