Rock Fort Times
Online News

நாமக்கல் அருகே லாரி பட்டறையில் தீ விபத்து..!- அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரடி ஆய்வு! (வீடியோ இணைப்பு)

நாமக்கல்லை அடுத்துள்ள வள்ளிபுரத்தில் முத்து என்பவர் பழைய இரும்புக் கடை நடத்தி வருகிறார். இவர் பழைய லாரி மற்றும் கார்களில் உள்ள இரும்புகளை சேகரித்து அதனைத் தனித்தனியாகப் பிரித்து விற்பனை செய்து வருகிறார்.இந்த நிலையில் அவரது கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த பழைய லாரிகளின் உதிரி பாகங்கள் திடீரென எரிந்ததால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இச்சூழ்நிலையில் நாமக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிக்காக வந்திருந்த சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பயணம் மேற்கொண்டார்.
அப்போது பழைய இரும்பு கடையின் வாகன உதிரி பாகங்கள் எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்த அவர், உடனடியாக வாகனத்தை நிறுத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினரிடம் தீ எவ்வாறு பற்றியது என்று கேட்டறிந்தார். மேலும் நாமக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலை என்பதால், வாகன ஓட்டிகள் சிரமப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தீயை விரைவிக அணைக்க வேண்டும் என அதிகாரிகளை வலியுறுத்தினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்