திருச்சி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சியாமளா (வயது 47). இவரிடம் மதுரை, திருச்சியை சேர்ந்த இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் சந்தித்து நாங்கள் வெளிநாடு வேலைக்கு ஆட்களை அனுப்பி வருகிறோம் உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா?, வெளிநாட்டுக்கு யாரையாவது அனுப்ப வேண்டுமா? என்று கூறியுள்ளனர். இதனை நம்பி சியாமளா தன்னுடைய மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தரக்கோரி ரூ.4 லட்சத்து 15 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால், வெளிநாட்டில் வேலையும் வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தையும் அவர்கள் திருப்பி தரவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சியாமளா கோட்டை குற்றபிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதாக இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.