Rock Fort Times
Online News

காதலியுடன் சண்டை -தூக்கில் தொங்கிய வாலிபர்! திருச்சி, மண்ணச்சநல்லூரில் பரிதாபம்.

திருச்சி மாவட்டம்,மண்ணச்சநல்லூர் புதுகாலணி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காதல் விவகாரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மண்ணச்சநல்லூர் புதுக்காலணி பகுதியை சேர்ந்த மூக்கன். இவரது மகன் நவீன்(21). மண்ணச்சநல்லூரில் இயங்கிவரும் தனியார் சாக்லேட் ஏஜென்சி கம்பெனியில் இவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நவீனுக்கும் அதே பகுதியில் இயங்கிவரும் பாத்திர கடையில் வேலை பார்க்கும் பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டு பேசி பழகி வந்துள்ளனர். இதையடுத்து இவர்கள் இருவருக்கிடையே சமீப நாட்களாக வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை போட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த நவீன், இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலை தூங்கி எழுந்த இவரது பெற்றோர் தூக்கில் தொங்கிய மகனை கண்டு அதிர்ச்சி அடைந்து கத்தினர். பின் அவர்களின் சத்தம் கேட்டது அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக ஶ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள மண்ணச்சநல்லூர் போலீசார் காதல் விவகாரத்தில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதோ காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்