Rock Fort Times
Online News

திருச்சியில் தோப்புக்கரணம் போட்டு விவசாயிகள் நூதன போராட்டம்….

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அண்ணாசிலை அருகில் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 47-ம் நாளாக இன்று.(18.09.2023) காலை பிள்ளையார் உருவ சிலையை வைத்து பூஜை செய்து இன்று டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை கூட்டத்தில் நல்ல முடிவு எட்டப்பட வேண்டும். தமிழக விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தர வேண்டும் என்று வலியுறுத்தி, இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்