விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு இரட்டிப்பு லாபம் வழங்கப்படும் என்ற மத்திய பா.ஜ.க. அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். நெல், கரும்பு ஆகியவற்றின் ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை முன்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 8-வது நாளான இன்று(04-08-23) அரை நிர்வாணத்துடன் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.