துறையூர் அருகே வயலில் ரத்தக் காயங்களுடன் சடலமாக கிடந்த விவசாயி- கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை…!
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் ( வயது 51). விவசாயியான இவர், மனைவி மற்றும் இரு
பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று(10-06-2025) காலை 11 மணி அளவில் வீட்டை விட்டு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை சுரேஷ்குமார் தனது விவசாய தோட்டத்தின் அருகில் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். அவ்வழியாகச் சென்றவர்கள் இதனைப் பார்த்து துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதேபோல சுரேஷ்குமாரின் உறவினர்களும் வந்து சுரேஷ்குமார் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அவரது உடலை போலீசார்
மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுரேஷ்குமார் உடலில் ரத்த காயங்கள் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது மது போதையில் கீழே விழுந்ததில் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து துறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.