Rock Fort Times
Online News

போலி பாஸ்போர்ட் :- திருச்சி விமான நிலையத்தில் 2 பயணிகள் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பல்லவராயன் பத்தை, கொல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 51). இவர் அபுதாபியில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது இவரது உடமைகளை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இவர் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து இமிகிரேஷன் அதிகாரி லோகநாதன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏர்போர்ட் போலீசார் ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்காக தஞ்சை மாவட்டம் ஏழுபட்டியைச் சேர்ந்த குணசேகரன் மகன் சிவா (வயது 22 )என்ற வாலிபரின் உடைமைகளை பரிசோதித்த போது அவர் போலியான ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்ல முயன்றது தெரியவந்தது. இது குறித்து இமிகிரேஷன் அதிகாரி முகேஷ் ராம் கௌதம் கொடுத்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் சிவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் இரண்டு நபர்கள் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்