திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக சமத்துவ பொங்கல் விழா- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு…!
திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்- அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்டத்தில் 47வது நிகழ்ச்சியாக மாவட்ட மற்றும் கிழக்கு மாநகர கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை ஏற்பாட்டில் சமத்துவ பொங்கல் விழா காட்டூர் பகுதியில் நடைபெற்றது.
விழாவில், மாவட்டச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கிழக்கு மாநகரச் செயலாளர் மு.மதிவாணன், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது ஆகியோர் கலந்து கொண்டு புதுப்பானையில் பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கினர். அதனைத்தொடர்ந்து பாரம்பரிய கலை மற்றும் மூக்குத்தி முருகன் இன்னிசை நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்ததோடு மகளிருக்கு பொங்கல் பொருட்களை வழங்கி சிறப்பித்தனர். இந்நிகழ்விற்கு மாவட்ட அமைப்பாளர் ராஜ்குமார், மாநகர அமைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை. வகிக்க பகுதி கழகச் செயலாளர் நீலமேகம், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை நிர்வாகிகள் மணிமாறன், பாரதிதாசன் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed.