Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டத்தில் ஆக. 23, 24 மற்றும் 25-ம் தேதிகளில் இபிஎஸ் சுற்றுப்பயணம்…- பேசும் இடங்களை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர்கள்…!!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே இருப்பதால், “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில்
திருச்சி மாவட்டத்தில் இம்மாதம் ஆகஸ்ட் 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கழக பொதுச்செயலாளர் பேசுவதற்கான இடம் தேர்வு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் மேற்பார்வையில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட கிழக்கு தொகுதியில் காந்தி மார்க்கெட் அருகே உள்ள மரக்கடை எம்ஜிஆர் சிலை மற்றும் மேற்கு தொகுதிக்குட்பட்ட புத்தூர் நால்ரோடு ஆகிய 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களை கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி பார்வையிட்டு கழக நிர்வாகிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்கினார். அப்போது புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, கழக அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல்,முன்னாள் அமைச்சர்கள் எஸ்.வளர்மதி, விஜயபாஸ்கர், முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், புரட்சித்தலைவி அம்மா பேரவை மாநில துணை செயலாளர்கள் ஆர். ஜோதிவாணன், அரவிந்தன், எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பி.ரஜினிகாந்த், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.வெங்கட்பிரபு, பகுதி கழக செயலாளர்கள், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்