Rock Fort Times
Online News

திருச்சி, புத்தூர் பகுதியில் இன்ஜினியர் தற்கொலை…!

கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் அப்துல் மாலிக் (வயது 33). இவர் திருச்சி தில்லை நகரில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் கேரளாவில் வசித்து வருகின்றனர். இவர் புத்தூர் விஸ்வநாயக்கன் பேட்டை தெரு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு சென்ற அவர் பின்னர் இரவு பணி முடிந்து இன்று (27-05-2025) வீடு திரும்பினார். இந்த நிலையில் வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்