தற்போது தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) டெல்லி சென்றுள்ளார். அவரது டெல்லி பயணம் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அ.தி.மு.க. அலுவலகத்தை காண செல்ல உள்ளதாக கூறினர். இருப்பினும், சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் ஏற்படலாம் என்ற பேச்சு சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில் எடப்பாடியின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Comments are closed.