Rock Fort Times
Online News

வருகிற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்- திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன், அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல் பேச்சு…!

திருச்சி புத்தூர் பகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புத்தூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கினார். புத்தூர் பகுதி செயலாளர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் ஜோதிவாணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன்,மாவட்ட இணை செயலாளர் ஜாக்குலின், திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் வக்கீல் முத்துமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் பேசுகையில், இளைஞர்கள் கட்சியில் சேர தொடங்கி விட்டனர். உண்மையிலேயே திமுகவை விட அதிமுக பெரிய கட்சி. அதிமுகவில் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கட்சிக்காக தொண்டர்கள் உழைத்துக் கொண்டே இருப்பார்கள். அதிமுக வட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் தினமும் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதனை நம்முடைய முயற்சியால் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும் என பேசினார். கூட்டத்தில் அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல் பேசுகையில்,நாடாளுமன்ற தேர்தலில் கட்சி தோற்று விட்டால் அதன்பிறகு வெற்றி பெறாது என்பது அர்த்தம் அல்ல. சில தேர்தல்களில் முதலில் தோற்று விட்டு பிறகு சரித்திர சாதனை, வரலாற்று படைத்து இருக்கிறது அதிமுக. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் வெற்று இடம் உள்ளதாக எதிர்கட்சிகள் கூறினார்கள். ஆனால், அதனை வெற்றி இடமாக எடப்பாடி பழனிசாமி மாற்றி காட்டினார். திமுக கூட்டணியில் வெளியேற கட்சிகள் காரணம் கண்டுபிடித்து வருகிறார்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மு.க ஸ்டாலினுக்கு சம்மட்டி அடி அடிக்க எடப்பாடியார் வியூகம் அமைத்து வெற்றி பாதை அமைத்து தருவார். வருகிற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் இலக்கிய அணி பாலாஜி, மகளிர் அணி நசீமா பாரிக், கலை பிரிவு ஜான் எட்வர்டு, ஐ.டி பிரிவு வெங்கட்பிரபு, தென்னூர் அப்பாஸ், பொதுக்குழு உறுப்பினர் வெல்லமண்டி பெருமாள், பகுதி செயலாளர்கள் அன்பழகன், ரோஜர், சுரேஷ்குப்தா, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா,நிர்வாகிகள் டி ஆர். சுரேஷ் குமார், ரஜினிகாந்த், ரமணிலால், எம்.ஜே.பி. வெஸ்லி, வண்ணாரப்பேட்டை ராஜன், உறையூர் சாதிக், உய்ய கொண்டான் திருமலை தினேஷ், பி.எம்.குமார், பாலையா, குருமூர்த்தி, ரவிச்சந்திரன், இளஞ்சியம், சுரேஷ்குமார், வெல்லமண்டி கன்னியப்பன், வாழைக்காய் மண்டி சுரேஷ், ஐ.டி.நாகராஜ், புத்தூர் பாலு, நாட்ஸ் சொக்கலிங்கம், சதீஷ்குமார், அரவனூர் பன்னீர்செல்வம், சிந்தை ராமசந்திரன், உறந்தை முத்தைய்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்