Rock Fort Times
Online News

நீர்வரத்து அதிகரிப்பால் புளியஞ்சோலை சுற்றுலா மையத்தில் பயணிகள் குளிக்க தடை…! ( வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்து புளியஞ்சோலை உள்ளது.  இந்தப் பகுதியில் கொல்லிமலை நீர்வீழ்ச்சியில் இருந்து நீர் புளியஞ்சோலை வழியாக செல்கிறது. இதனால் இயற்கை அழகை ரசிப்பதற்காக திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்து குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் வருகை தந்து ஆற்றில் குளித்து மகிழ்ச்சியுடன் செல்வார்கள்.  இந்தநிலையில் கொல்லிமலை பகுதியில் மழை பெய்து வருவதாலும், ஆற்றில் நீர் வரத்து அதிகமாக இருப்பதாலும் அதிகளவில் மக்கள் வருவார்கள் என்பதால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறையினர் புளியஞ்சோலை சுற்றுலாதளம் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர்.

 

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்