கலைஞர் பெயரால் அமைய உள்ள பல்கலைக்கழகத்திற்கு முட்டுக்கட்டை போடும் தமிழக ஆளுநரை கண்டித்து திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்…!
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கழக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் என்.கோவிந்தராஜன் தலைமையில் இன்று (19-06-2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதலின்படி, மொத்த வாக்காளர்களில் 30 சதவீத வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். குறிப்பாக இளம் வாக்காளர்களை கழகத்தில் அதிகளவு சேர்க்க வேண்டும். தலைமை கழகம் யாரை வேட்பாளராக நிறுத்துகிறதோ அவரை வெற்றி பெறச் செய்ய அயராது பாடுபட வேண்டும் என பேசினார். கூட்டத்தில், கீழடி அகழாய்வில் கிடைக்கப்பெற்ற தமிழரின் பண்பாடு கலை கலாச்சாரம் பற்றிய ஆவணங்களை ஏற்று அறிக்கை வெளியிட மறுக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வது. தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பெயரால் அமையவிருக்கும் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன், தொகுதி பார்வையாளர்கள் கதிரவன், டாக்டர் அண்ணாமலை, மணிராஜ், வண்ணை அரங்கநாதன், கே.என்.சேகரன், சபியுல்லா மற்றும் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர், தொகுதி பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.