முத்தமிழ் அறிஞரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட கரூர் பைபாஸ் சாலையில் குடமுருட்டி அருகில் 100 அடி உயர கொடி கம்பத்தில் திமுக கொடி ஏற்று விழா இன்று(28-11-2023) நடந்தது. விழாவில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார்.

விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், கே.என்.சேகரன், சபியுல்லா, மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் குணசேகரன், பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.