Rock Fort Times
Online News

நாளை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…- மதுரையில் பொதுக்குழுவை கூட்டுவது குறித்து முடிவு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கானஅறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார். காலை 10.30 மணி அளவில் கலைஞர் அரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவான காலமே உள்ளதால் அது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. கட்சி ரீதியாக பெரிய அளவில் உள்ள ஒன்றியங்களை பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏதாவது புகார் இருந்தால் அதுபற்றி கூட்டத்தில் கேட்கப்படும் என தெரிகிறது.இது மட்டுமின்றி தேர்தல் பிரசார பணிகளை முடுக்கி விடுவது பற்றியும், அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார். தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை மதுரையில் அடுத்த மாதம் நடத்துவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்