Rock Fort Times
Online News

திருச்சி மண்டலத்தில் உள்ள 41 தொகுதிகளிலும் திமுக+கூட்டணி வெற்றிவாகை சூடும்- அமைச்சர் கே.என்.நேரு…!

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திருச்சியில் இன்று( மே 22) நடைபெற்றது. கிழக்கு மாநகரச் செயலாளர் மு.மதிவாணன் வரவேற்றார். கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு பங்கேற்று பேசுகையில், வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று 7 -வது முறையாக ஆட்சி அமைக்கும். திருச்சி மண்டலத்தில் உள்ள 41 தொகுதிகளிலும் திமுக மற்றும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உள்ள பிரச்சனைகள், தொகுதியில் நிலவும் பிரச்சனைகள், கூட்டணி கட்சியினரின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு அதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால்
சரி செய்யப்பட்டு வருகிறது என்று பேசினார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு ஏழாவது முறையாக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வர ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்றார். கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.என்.சேகரன், சபியுல்லா, மாவட்டத் துணைச் செயலாளர்கள் லீலா வேலு, மூக்கன், செங்குட்டுவன், மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, மண்டல குழு தலைவர் ஜெயநிர்மலா, பகுதி செயலாளர்கள் கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ், ஏ.எம்.ஜி விஜயகுமார், பாபு, மணிவேல், சிவக்குமார், மோகன், ராஜ்முகம்மது, நீலமேகம், பொதுக்குழு உறுப்பினர்கள் கவுன்சிலர் கே.கே கே .கார்த்திக், வேங்கூர் தனசேகரன், கவுன்சிலர்கள் சாதிக் பாட்ஷா, எல்.ஐ.சி , சங்கர், மணிமேகலை ராஜபாண்டி,தொழிலதிபர் ஏ.பி ரகுநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பின்
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறுகையில், மதுரையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை முதல்வர் என போஸ்டர் ஒட்டி உள்ளனர். 100 ரூபாய் இருந்தால் யார் வேண்டுமானாலும் போஸ்டர் ஒட்டலாம் என்ற நிலை வந்து விட்டது என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்