இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்ய வியட்நாம் நாட்டின் முன்னணி விமான நிறுவனமாக திகழும் வியட்ஜெட் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. திருச்சியில் இருந்து வியட்நாம் நாட்டின் ஹோ சி மின் சிட்டி இடையே வாரத்திற்கு 3 விமானங்களையும், ஹோ சி மின் சிட்டியில் இருந்து திருச்சி இடையே வாரத்திற்கு 3 விமானங்களையும் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன் துவக்க விழா நேற்று நள்ளிரவு ( 02.11.2023 ) நடைபெற்றது. திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி, வியட் ஜெட் நிறுவன பொது மேலாளர்கள் விபுல் வர்மா, பீஃபுல் ஆகியோர் கலந்து கொண்டு விமான சேவையை துவக்கி வைத்தனர். 106 பயணிகளுடன் வியட்ஜெட் விமானம் தனது முதல் சேவையை தொடங்கியது. அறிமுக சலுகையாக குறைந்த செலவில் பல்வேறு பயணத்திட்டங்களை நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Prev Post
Comments are closed, but trackbacks and pingbacks are open.