திருச்சி டிஐஜியாக பணியாற்றி வருபவர் வருண்குமார் ஐபிஎஸ். இவரது மனைவி வந்திரா பாண்டே. இவரும் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர், மத்திய அரசு பணியில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தினர் பற்றியும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியினர் தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக டிஐஜி வருண்குமார் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 4 ல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக டிஐஜி வருண்குமார் ஏற்கனவே ஆஜராகி விளக்கம் அளித்துள்ள நிலையில் சீமான் இன்று(07-04-2025) மாலை 5 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இன்று மாலை 5 மணிக்குள் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஆஜர் ஆகாத சீமான் சென்னையில் தனியார் கல்லூரி விழா ஒன்றில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.