தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காப்புகாடுகளில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக பாலக்கோடு டிஎஸ்பி சிந்துக்கு தகவல் வந்தது. இதனையடுத்து டிஎஸ்பி உத்திரவின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் கிராமங்கள் மற்றும் அதன் அருகே உள்ள காப்புக்காடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது உலகானஅள்ளி அருகே உள்ள காப்புகாட்டு வழியாக வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதன் பின்னர் அப்பகுதியில் தீவிர சோதனை செய்த போது மறைவான இடத்தில் ஒருவர் சாராயம் காய்ச்சி விற்றது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் அந்த நபர் தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை துரத்தி பிடித்து விசாரணை செய்தனர். உலகானஅள்ளியை சேர்ந்த முருகேசன் (50) என தெரியந்தது. இதன் பின்னர் அவரை கைது செய்த போலீசார் 40லிட்டர் சாராய ஊறல்களை அழித்தனர்.