Rock Fort Times
Online News

புயல் உருவாவதில் தாமதம் : 30 -ம் தேதி கரையை கடக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்…!

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் உள்ளது. இதன் காரணமாக  ‘பெங்கல்’ புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நவம்பர் 30ம் தேதி காலை கரையை கடக்கும்’ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. நாகப்பட்டினத்துக்கு தென் கிழக்கில், 370 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு தெற்கே, 550 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது. இது ‘பெங்கல்’ புயலாக வலுவடைந்து, வட கடலோர மாவட்டங்களை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரியில் இன்று(28-11-2024) இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 50 முதல் 70 கி.மீ., வேகம் வரை காற்று வீசலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்