Rock Fort Times
Online News

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு: திருச்சியில் அனைத்து கட்சி சார்பில் மௌன அஞ்சலி ஊர்வலம்….

பிரபல நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவருமான மறைந்த விஜயகாந்த்க்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திருச்சியில் அனைத்து கட்சிகள் சார்பில் மௌன அஞ்சலி ஊர்வலம் நடந்தது. திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த மௌன அஞ்சலி ஊர்வலமானது திருச்சி அண்ணா சிலையில் இருந்து துவங்கியது. ஊர்வலத்தில் மலைக்கோட்டை பகுதி தி.மு.க. செயலாளர் மெடிக்கல் மோகன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநகர மாவட்ட செயலாளர் இன்டர்நெட் ரவி,  பா.ஜ.க. மாநகர மாவட்ட துணைத்தலைவர் ஜெய் கர்ணா, திருச்சி மாநகர மாவட்ட பாஜக தலைவிரேகா, ம.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர்டி.டி.சி.சேரன், அ.தி.மு.க.  முன்னாள் மாமன்ற உறுப்பினர், வர்த்தக அணி செயலாளர் ஜெரால்டு,  20 வது வார்டு மாமன்ற உறுப்பினர் எல்.ஐ.சி. சங்கர்  உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான‌ மேடைப் பேச்சு...

1 of 880

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்