Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் பகல்பத்து 5ம் நாள்: “அரைச் சிவந்த ஆடையுடன்” கிளி ஏந்தி எழிலாகக் காட்சியளித்த நம்பெருமாள்!

உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது பகல்பத்து உற்சவம் நடைபெறுகிறது. பகல்பத்து ஐந்தாம் நாளான இன்று( டிச.24) திருமாலை பிரபந்தம் செவிமடுக்க சௌரிக் கொண்டை சாற்றி, அதில் புஜ கீர்த்தி, இரு வெள்ளை கல் வில்வ பத்ர பதக்கம், முத்து பட்டை, முல்லை பூ சரம் சுற்றி வைர‌ அபய ஹஸ்தம் சாற்றி, அதில் தங்க கோலக்கிளி எடுத்து கீழே தொங்கல் பதக்கம் ஆட திருமார்பில் ஸ்ரீரங்க விமான பதக்கம், கல் இழைத்த ஒட்டியாணம், அதன் கீழே சிகப்பு கல் சூர்ய பதக்கம் அதன் கீழ் வரிசையாக வெள்ளைகல் அடுக்கு பதக்கங்கள், காசு மாலை, 8 வட முத்து மாலை,  “அரைச் சிவந்த ஆடையின் மேல்” என்ற அமலனாதிபிரான் பாசுரத்திற்கு ஏற்ப சிவப்பு நிற பட்டு அணிந்து,  பின் சேவையாக சிகப்புக் கல் பதக்கம், காசு மாலை, வைரக்கல் ரங்கூன் அட்டிகை அணிந்து சேவை சாதிக்கிறார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்