Rock Fort Times
Online News

மணப்பாறையில் துணிகர சம்பவம்: வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள், பணம் கொள்ளை…!

திருச்சி மாவட்டம், மணப்பாறை மாவட்ட அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பாரதியார் நகரில் வசித்து வருபவர் தீன் முகம்மது (53). இவருடைய மனைவி நஜீமாபேகம். இவர்கள் குடும்பத்துடன் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது வீட்டை அருகிலுள்ள ஜெயராஜ் என்பவர் பராமரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று(13-02-2024) இரவு ஜெயராஜ் வீட்டில் விளக்குகளை எரிய விட்டுவிட்டு சென்றிருந்தார்.

இன்று அதிகாலை வந்து பார்த்தபோது அந்த வீட்டின் முன்பக்க கேட் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. இதனால், அதிர்ச்சி அடைந்த ஜெயராஜ், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள 4 பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், அந்த பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்தன. இதுகுறித்து சவுதி அரேபியாவில் உள்ள தீன்முகமதுக்கு, ஜெயராஜ் தகவல் தெரிவித்தார். அவர், போலீசில் புகார் அளிக்க கேட்டுக் கொண்டதன்பேரில் மணப்பாறை போலீசாருக்கு ஜெயராஜ் தகவல் கொடுத்தார். தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்