Rock Fort Times
Online News

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.

புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் 201 நபர்கள் சிகிச்சைக்காக வந்தனர். மருத்துவமனைக்கு வந்தவர்களில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் விபரம் வருமாறு: புதுச்சேரி -16 நபர்கள், காரைக்கால் -13 நபர்கள், ஏனாம் -3 நபர்கள் என மொத்தம் 33 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்தார். இவர்கள் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை மற்றும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்…

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்