Rock Fort Times
Online News

திருச்சியில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா..!

அமைச்சர் கே.என்.நேரு நடத்தி வைத்தார்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம்-1 சார்பில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா இன்று(15-10-2023) நடைபெற்றது. இதனை அமைச்சர் கே.என்.நேரு நடத்தி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள் மற்றும் 1000 நாட்கள் குறித்த கையேட்டை வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் 5 வகையான கலவை சாதம் வழங்கப்பட்டு கர்ப்பிணிகளுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் வைத்தியநாதன், எம்.எல்.ஏ.க்கள் பழனியாண்டி, ஸ்டாலின்குமார், கதிரவன், மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன்,
மாவட்ட திட்ட அலுவலர் வித்யா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் காஞ்சனா, ஒன்றிய செயலாளர் கதிர்வேல், மாவட்ட இளைஞரணி ஆனந்த், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் பி.ஆர். சிங்காரம், பொதுக்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மண்டலக்குழுத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன், மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா, பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், கமால் முஸ்தபா, தில்லை நகர் கண்ணன், கவுன்சிலர்கள் முத்து செல்வம், விஜயா ஜெயராஜ், கலைச்செல்வி ஜெகநாதன், கலைச்செல்வி கருப்பையா, வட்டச் செயலாளர்கள் கருப்பையா, மோகன், பந்தல் எஸ்.ராமு, அந்தோணிசாமி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்