திருச்சி அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாப பலி!- நண்பர்களுடன் குளிக்கச்சென்றபோது பரிதாபம்!
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சுஜித் (வயது 21). இவர் திருச்சி கருமண்டபத்தில் அறையெடுத்து தங்கி, தனியார் கல்லூரியில் பி.சி.ஏ 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் சுஜித் தனது நண்பர்கள் 6 பேருடன் ராம்ஜி நகர் அரவாக்குடி ரெயில்வே கேட் அருகில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்பொழுது சுஜித்துக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். நண்பர்கள் காப்பற்ற முயன்றும் பயனில்லாமல் போகவே இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புத் துறையினர் நீரில் மூழ்கிய மாணவர் சுஜித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.