Rock Fort Times
Online News

எமனாக மாறிய செல்போன்: திருச்சியில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை…!

திருச்சி, உறையூர் கீழ வைக்கோல் கார தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது 18 வயது மகள் அருகிலுள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவர் அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனை தந்தை கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த அவரது மகள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின்பேரில் உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்