திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை உள்ள தனியார் கல்லூரி பேருந்து கல்லூரி முடிந்து மாணவ, மாணவியரை எற்றிக்கொண்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை நோக்கி கல்லூரி பேருந்து புறப்பட்டது. பேருந்தானது புங்கனூர் பிரிவு ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திண்டுக்கல் நோக்கி சென்ற சரக்கு லாரியின் பின்புறம் கல்லூரி பேருந்து மோதியது, இந்த விபத்தில் கல்லூரி பேருந்தின் முன் பக்கம் முற்றிலும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் 8 மாணவ, மாணவியர் காயமடைந்தனர். மேலும் கல்லூரி பேருந்து ஓட்டுநரின் கால்கள் பேருந்துக்குள் சிக்கிக் கொண்டது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பேருந்துக்குள் சிக்கிக் கொண்ட ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் சரக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட ரேஷன் பொருட்கள் ரோட்டில் சிதறி கிடந்தன. இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி கண்டோன்மெண்ட் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்..

Comments are closed, but trackbacks and pingbacks are open.