Rock Fort Times
Online News

திருச்சி அரசு மருத்துவமனையில் சுத்தமான சாப்பாடு ! சுகாதாரத்துறை செயலாளர் பாராட்டு !

திருச்சி, புத்தூரில் மகாத்மா காந்தி நினைவு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை  அனைத்து வகையான நோய் பாதிப்புகளுக்கும் உயர்தர சிகிச்சை அளிப்பதற்கான நவீன மருத்துவ  வசதிகளும் இருப்பதால் இங்கு திருச்சி மாவட்டம் மட்டுமன்றி அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுவாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் பெரும்பாலானோர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள். இதனால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நேரத்தில் அவர்களுக்கு அங்கு மூன்று வேளையும்  மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் சாப்பாடு வழங்கப்படுகிறது. இப்படி வழங்கப்படும் சாப்பாடு சுத்தமாகவும்,சுகாதாரமாகவும் வழங்கப்படுவதால் திருச்சி அரசு மருத்துவமனையின் செயல்பாட்டை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு பாராட்டியுள்ளார். இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் குமரவேல் தெரிவித்ததாவது., மாநிலத்திலேயே முதன்முறையாக திருச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தான், சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சுகாதாரமான வகையில் மூடியுடன் கூடிய தட்டில் உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது இதன் மூலம் சுமார் 500 நோயாளிகளுக்கு காலை, மதியம், இரவு என   மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.எங்களின் செயல்பாட்டை பாராட்டிய சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாகு  மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் இதை பின்பற்ற வேண்டும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்