Rock Fort Times
Online News

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: திருச்சி மாவட்டத்தில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!

இயேசு பிரான் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகையாக ஆண்டு தோறும் டிசம்பர் 25ம் தேதியான இன்று உலகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து அவர்களிடத்தில் அன்பு செலுத்தி வாழ வேண்டும் என்ற இயேசு பிரானின் கோட்பாட்டை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று அனைவரும் மகிழ்ச்சியுடன் இயேசு பிறப்பை கொண்டாடி வருகின்றனர். ஏராளமான கிறிஸ்துவ ஆலயங்களில் நள்ளிரவு முதல் சிறப்பு திருப்பலிகள் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கிறிஸ்துமஸ் விழாவை யொட்டி திருச்சி மாவட்டத்தில் மேலப்புதூர் தூய மரியன்னை பேராலயம், உலக மீட்பர் பசிலிக்கா, குழந்தை இயேசு திருத்தலம், புனித அந்தோணியார் ஆலயம், புனித சூசையப்பர் ஆலயம், புனித லூர்து அன்னை ஆலயம், உள்ளிட்ட ஏராளமான கிறிஸ்துவ ஆலயங்களில் நள்ளிரவு முதல் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகின்றது. கிறிஸ்துவர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்து திருச்சி மேலப்புதூர் தூயள மரியன்னை பேராலயத்தில் திருச்சி மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி ஆனது நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. திருப்பலி நிறைவுற்றபின்பு திருப்பலியில் கலந்து கொண்ட கிறிஸ்துவர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்