திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ! முதன்மை நீதிபதிக்கு ” ஸ்வீட் ட்விஸ்ட் ” வைத்த வழக்கறிஞர்கள் !
திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார் கவுன்சில் அரங்கத்தில் நேற்றைய தினம் ( டிச.24 )நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். கிறிஸ்துமஸ் அன்று தான் நீதிபதி கிறிஸ்டோபரின் பிறந்தநாளும் என்பதால், அவரது பிறந்தநாளை சஸ்பென்சாக கொண்டாட நினைத்த வழக்கறிஞர்கள், விழா அரங்கத்திலேயே பிறந்த நாள் கேக் வெட்டி நீதிபதியை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி என்.எஸ்.மீனா சந்திரா, குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முல்லை பி.சுரேஷ், செயலாளர் பி.வி. வெங்கட், துணைத் தலைவர்கள் ஆர். பிரபு, எஸ்.சசிகுமார், இணைச் செயலாளர் பி. விஜய் நாகராஜன், பொருளாளர் எஸ்.ஆர்.கிஷோர் குமார், வழக்கறிஞர்கள் எம்.ஜேசு பால்ராஜ், எஸ்.மார்ட்டின், அரசு வழக்கறிஞர் பி. சவரிமுத்து , சி. அந்தோணி ராஜ், பி.கிறிஸ்டோபர் சத்யராஜ், ஆர். ராமச்சந்திரன், குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.விஜயன், எம்.சித்ரா, என்.ஜெயராமன், எஸ்.அருண் பிரசாத், ஆர். பிரியா, கராத்தே வி. முத்துக்குமார், மில்லர் ராஜ், எஸ். முருகேசன், எஸ்.எழில்அரசி, ஐ.ராஜிவ் காந்தி, ஐ.ராஜ்குமார், வி.விஜயலக்ஷ்மி, எம்.ரங்கீலா,பி. கனிமொழி உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
Comments are closed.