சட்ட நுழைவுத் தேர்வில் சாதித்த திருச்சி பச்சைமலையை சேர்ந்த மாணவர் பரத் முதல்வர் மு. க.ஸ்டாலின் வாழ்த்து !
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது பச்சை மலை மலை.திருச்சி மற்றும் சேலம் மாவட்ட எல்லைகளை உள்ளடக்கிய இம்மலைப்பகுதியில் பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் தோனூர் என்கிற சிற்றூர். இக்கிராமத்தை சேர்ந்த மாணவர் பரத் என்பவர் கிளாட் ( CLAT ) எனப்படும் பொது சட்ட நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இதன் மூலம் கிளாட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உயர் கல்விப் பயில தகுதி பெறும் முதல் பழங்குடியின மாணவர் என்கிற சாதனையை மாணவர் பரத் படத்துள்ளார். இதுகுறித்து அறிந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சட்ட நுழைவு தேர்வில் சாதனை படைத்த மாணவர் பரத்தை வாழ்த்தி எக்ஸ் தள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருச்சி மாவட்டம் பச்சைமலை தோனூர் மலை கிராமத்தைச் சேர்ந்த மாணவர் பரத் பொது சட்ட நுழைவு தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். கிளாட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பெற தகுதி பெரும் முதல் பழங்குடியின மாணவர் என்கிற சாதனையை படைத்துள்ளார். இதனை அறியும் போது உள்ளபடியே உள்ளம் உவகையில் நிறைகிறது. தம்பி பரத் சட்டம் பயின்று தன் அறிவொளியை இந்த சமூகத்திற்கு வழங்கிட வேண்டும் என வாழ்த்துகிறேன். அவரது சட்ட படிப்புக்கு திமுக சட்டத்துறையும் அதன் செயலாளர் இளங்கோவும் துணை நின்று அவரை வழிநடத்துவார்கள் என பதிவிட்டுள்ளார்
Comments are closed.