தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. நவல்பட்டு அண்ணா நகர் ஐடி பார்க் எஸ்.ஆர்.எம் பள்ளியில் ஏப்ரல் 2-ம் தேதி நடைபெற்ற இம்முகாமை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார். இதில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சி.கங்காதரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். சுமார் 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பயனடைந்த இம்முகாமில் உயர் கண் அறுவை சிகிச்சைக்காக மருத்துவர்கள் பரிந்துரைத்த 35 பேருக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தங்கள் வீடுகளுக்கு வந்தடைந்தனர். இம்மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருந்த திருச்சி தெற்குமாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் எஸ். தங்கமணியை பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் மனதார பாராட்டினர்.