மதுரை கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பணிகளை எளிதாக்குவதற்காக ரெயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருச்சியில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் இரு மார்கங்களிலும் பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 11,12,13,14,18,19,20,21,25,26, மற்றும் 28 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து மானாமதுரை வரை இந்த ரயில் மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கத்தில் வழக்கமாக ராமேசுவரத்தில் இருந்து மதியம் 3 மணியளவில் திருச்சி புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகஸ்ட் 11,12,13,14,18,,19,20,21,25,26,28, ஆகிய தேதிகளில் மானாமதுரையில் இருந்து மாலை 4.55 மணியளவில் புறப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.