திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட லாலாபேட்டை, குளித்தலை ரெயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் , நாளை சில ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. சேலம்- மயிலாடுதுறை மெமு விரைவு ரெயில் (வண்டி எண்.16812) இன்றும், நாளையும் பிற்பகல் மதியம் 2.05 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு, கரூரை வந்தடையும். கரூர்- மயிலாடுதுறை இடையே சேவை இருக்காது. அதே நேரத்தில் கரூரில் இருந்து மயிலாடுதுறைக் நாளையும் முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயில் இயக்கப்படும். இந்த ரெயில் கரூரில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும்.இதேபோல் திருச்சி- ஈரோடு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (வண்டி எண். 06809) வழக்கமாக திருச்சியில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 1 மணி நேரம் தாமதமாக மாலை 5.10 மணிக்கு புறப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.