Rock Fort Times
Online News

திருச்சியில் இருந்து ஈரோடு புறப்படும் பயணிகள் ரயில் நேரத்தில் மாற்றம்…!

விழுப்புரம், ஈரோடு பயணிகள் ரயில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், நிர்வாக காரணங்களால், விழுப்புரத்திலிருந்து காலை 5.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்- திருச்சி பயணிகள் ரயில் (06891) அக்டோபர் 28-ம்தேதி முதல் திருச்சிக்கு 9 மணிக்குப் பதிலாக 9.25 மணிக்கு வந்தடையும். திருச்சியிலிருந்து காலை 7 மணிக்குப் புறப்படும் திருச்சி -ஈரோடு பயணிகள் ரயில் (06611) அக்டோபர் 28-ம் தேதி முதல் காலை 7.20 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்