Rock Fort Times
Online News

திருச்சியில் பெண் தொழிலாளியிடம் தாலிச் சங்கிலி பறிப்பு….!

திருச்சி அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு வடக்கு மேடு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சாந்தி (வயது 38). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு வேலை முடிந்து சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். நவலூர் குட்டப்பட்டு சுடுகாடு பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரை வழிமறித்தனர். பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த மூன்றேகால் பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து ராம்ஜி நகர் போலீசில் அவர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்