அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் மற்றும் தொழில் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சீர் மரபினர் பிரிவு மாணவ – மாணவிகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கானகல்வி உதவித்தொகை பெற தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பித்து பயனடைய திருச்சி மாவட்ட கலெக்டர் எம். பிரதீப் குமார் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது., மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மைநலத்துறையின் மூலம் ஆண்டுதோறும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவ மாணவிகள் https://umis.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பிப்ரவரி 28ம் சமர்ப்பிக்கலாம். மத்திய அரசின் கல்வி உதவித் தொகையைப் பெற கலை அறிவியல் கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு எந்த வருமான வரம்பும் கிடையாது. அதே நேரத்தில், பொறியியல் மற்றும் தொழில் படிப்பு பயிலும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50. ஆயிரத்திற்கு மிகாமல் மிகாமல் இருக்க வேண்டும். கடந்த ஆண்டு இந்த கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்கள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.புதிதாக கல்வி உதவித் தொகை பெற விரும்புபவர்கள் மட்டும் விண்ணப்பித்து பலனடையலாம். ஒருவேளை மாணவர்கள் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி எனில் அதற்கான சான்றிதழையும் இந்த கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.இது குறித்த மேலும் தகவல்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2ம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம் என இவ்றிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.