Rock Fort Times
Online News

திருச்சி, காந்தி மார்க்கெட் பகுதியில் கடையை சேதப்படுத்திய 5 பேர் மீது வழக்கு..!

திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மரக்கடை பகுதியில் கடை வைத்து நடத்தி வருபவர் நவ்ஷாத் அலி (வயது 44). அதே பகுதியில் சின்னசாமி நகரை சேர்ந்த அண்ணாமலை ( 52) என்பவரும் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள் 5 பேர் சேர்ந்து நவ்ஷாத் அலி கடையை சேதப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக நவ்ஷாத் அலி, காந்தி மார்க்கெட் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அண்ணாமலை, சீனிவாசன், மணிகண்டன், ரவிச்சந்திரன், சதாம் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்