எடப்பாடி பழனிசாமி குறித்து கேலிச்சித்திரம்: திமுக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி எஸ்.பி யிடம் அதிமுக நிர்வாகிகள் மனு…!
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்சோதி, தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கடந்த 17- 6-2025 அன்று எக்ஸ் சமூக வலைதளத்தில், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அமைச்சர் டிஆர்பி ராஜா நிர்வகித்து வரும் திமுக அதிகாரப்பூர்வ தகவல் தொழில்நுட்ப பிரிவின் பக்கத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்திகளோடு ஆபாசமாக ஒரு கேலி சித்திரத்தை இணைத்து பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். அதிமுக தொண்டர்களின் உணர்ச்சியை தூண்டும் வகையிலும், புண்படுத்தும் வகையிலும் மற்றும் அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் திட்டமிட்ட சதி செயலாக இது உள்ளது. மேலும், பொதுமக்களால் பெரிதும் மதிக்கக்கூடிய அதிமுகவின் கழக கொடியினை அவமதிக்கும் வகையில் எக்ஸ் சமூக வலைதளத்தில் தவறாக பயன்படுத்தி கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளனர். இத்தகைய செயல்கள் இரு அரசியல் கட்சி தொண்டர்களிடையே வெறுப்பு மற்றும் மோதல் போக்கை தூண்டும் வகையிலும், அதன் காரணமாக சட்டம்- ஒழுங்கு பிரச்சனைக்கு வழிவகுக்கும் வகையிலும் உள்ளது. ஆகவே, இந்த செயலானது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே அவதூறு பதிவினை எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட திமுக ஐடி விங் மாநில செயலாளர் அமைச்சர் டிஆர்பி ராஜா மீதும் மற்றும் அதனை பகிர்ந்தவர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுத்து கேலிச்சித்திரத்தை உடனடியாக சமூக வலைதளங்களில் இருந்து நீக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
மனு அளித்தபோது கழக அமைப்புச் செயலாளர் ஆர். மனோகரன், வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாநில துணை செயலாளர் புல்லட் ஜான், பேரவை மாநில துணை செயலாளர் ஜெயம் ஸ்ரீதர், மாவட்ட துணை செயலாளர் சுபத்ராதேவி, கோவிந்தராஜ், பொருளாளர் சேவியர், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், பேரவை மாவட்ட செயலாளர்கள் சூரியூர் ராஜா, அய்யம்பாளையம் ரமேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு திருப்புகழ், எம்ஜிஆர் மன்ற செயலாளர் அறிவழகன் விஜய், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கே.டி.கார்த்திக், எஸ்.பி.முத்து கருப்பன், அருணகிரி, நகர செயலாளர் எஸ்.பி.பாண்டியன், கூத்தைப்பார் முத்துக்குமார், பகுதி செயலாளர் பாலசுப்ரமணியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
திருச்சி மாநகர் மாவட்டம்:
இதேபோல, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளரும், மாநகராட்சி முன்னாள் மேயருமான
ஜெ.சீனிவாசன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் திரண்டு வந்தனர். அப்போது போலீசார் குறிப்பிட்ட நபர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும் என தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன், முன்னாள் எம்பி ரத்தினவேல், வழக்கறிஞர் பிரிவு முல்லை சுரேஷ் ஆகியோர் போலீஸ் உதவி கமிஷனரிடம் மனு அளித்தனர். அப்போது மாவட்ட துணைச் செயலாளர் வனிதா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமாபாரிக், ஜாக்குலின், பகுதி செயலாளர் அன்பழகன், கலைவாணன், ராஜேந்திரன், ரோஜர், ஏர்போர்ட் விஜி, கலீல் ரகுமான் மற்றும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு முத்துமாரி, எட்வின் ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Comments are closed.