Rock Fort Times
Online News

திருச்சி அருகே கார்-வேன் மோதல்: சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பலி…!

திருச்சி, கோட்டை காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் திருக்குமரன் என்கிற திருக்குமார். இவர் நேற்று( மே 25) இரவு தஞ்சாவூரிலிருந்து திருச்சி மாவட்டம் நவல்பட்டு அருகே உள்ள கும்பக்குடி அருகே ஒரு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேனும், காரும் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த திருக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த திருக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளியை மடக்கி பிடித்ததற்காக திருச்சி காவல் ஆணையர் காமினி, திருக்குமாரை பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. திருக்குமாரின் மறைவு காவல்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்